பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட தொடர்பு அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பி.சேகர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர்.
பேராவூரணி டெங்கு விழிப்புணர்வு பேரணி.
September 29, 2016
0
Tags
Share to other apps
